Sunday, August 29, 2010

"அலங்கார ஆன்மீகத்திற்கு" சிவவாக்கியரின் சாட்டை அடி

"கல்லு கட்டை சாணி மண்ணு காராயந்தூர செம்பில்
     கொல்லன் வார்த்துரு வமைத்த கோயினுட் சிலைகளை
மல்லுகட்டாய்க் கட்டி மகோத்சவம் செய்த  போதினும்
    இல்லையே கதிபெறவும்  ஏமனுப் பிணங்களே " 

"திருத்தலம் திருப்பணி திருவிழாவும் செய்திட
      ஒருத்தர் நற்கதி பெறவும் உள்ளதோ சொல்லெங்கினும்
வருத்தமின்றி  ஏழைகட்கு  மாதுலர் பரங்கட்கும்
     பெருத்தவன் அன்னதானம் செய்யப் பேருலகை அடைவாரே".

அண்ட வெளி வணக்கம்

வான்வாழி வானையளி  மாதவரும்  வாழி
கோன்வாழிகுரு வாழிகுவலயத்தோர் வாழி
ஆன் வாழி அமரர் முத லிருடி  சித்தர் வாழி
நான்  நீயென லகற்று நாதாக்கள் வாழியவே

                             நன்றி:  திரு.சித்தர்தாசன் சுப்ரமணியன் சுந்தர்ஜி அய்யா அவர்கள்
                                          திரு .அகத்தியர்தாசன்  கேசவமூர்த்தி அய்யா அவர்கள்