Tuesday, November 2, 2010

பெண் மோக பித்தர்களுக்கு ......

"பெண்ணாகி வந்து ஒரு மாயப்
   பிசாசம் பிடித்திட்டென்னைக் 
கண்ணால் வெருட்டி முலையால் 
   மயக்கிக் கடிதடத்துப் 
புண்ணாம் குழியிடைத் தள்ளி என்
   போதப் பொருள் பறிக்க 
எண்ணாது உனைமறந் தேனிறை
   வாகச்சி ஏகம்பனே".  
----------------------------------------------------------------
  "நாறும் குறுதிச் சலதாரை 
        தோல் புரைநாள்  தொறும்சீ
ஊறும் மலக்குழி காமத் 
     துவாரம் ஒளித்திடும்புண் 
தேறும் தசைப்பிளப்பு அந்தரங்
     கத்துள் சிற்றின்பம் விட்டு 
ஏறும் பதந்தரு வாய்திருக் 
   காளத்தி ஈச்சுரனே" .
----------------------------------------------------------------------
"எத்தனைபேர் நட்டகுழி எத்தனைபேர் தொட்ட முலை
எத்தனைபேர் பற்றி இழுத்த இதழ் -நித்தம் நித்தம்  
பொய்யடா பேசும் புவியின்மட மாதரைவிட்டு 
உய்யடா உய்யடா உய்".------------------------------------ஞான பிதா (பட்டினத்தார் )

Monday, November 1, 2010

இருப்பது பொய் போவது மெய்..

"இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே
ஒருத்தருக்கும் தீங்கினையுன் னாதே - பருத்ததொந்தி
நம்மது என்று நாம் இருப்ப நாய்நரிகள் பேய் கழுகு
தம்மது என்று தாம் இருக்கும் தான்".
                                          ஞான பிதா (பட்டினத்தார் ).

மீண்டும் பிறவி வேண்டாம் நமசிவாயமே ..

"மாதா உடல்சலித்ததாள் வல்வினையேன் கால் சலித்தேன்
வேதாவும் கைசலித்து விட்டானே - நாதா 
இருப்பையூர் வாழ்சிவனே இன்னமோர் அன்னை 
கருப்பையூர் வாராமல் கா". 
                              ஞான பிதா (பட்டினத்தார் ).

ஞான பிதா (பட்டினத்தாரின் ) சிவ சரணாகதி ....

"என் செயல் ஆவதி யாதொன்றும் மில்லை இனித்தெய்வமே
     உன் செயலே என்று உணரப்பெற்றேன் இந்த ஊன் எடுத்த 
பின் செய்த தீவினை யாதொன்றும் மில்லைப் பிறப்பதற்கு 
    முன்செய்த தீவினை யோஇங்ங னேவந்து மூண்டதுவே".