Monday, October 17, 2011

"சற்குரு அகத்தியரிடம் எனது - முறையீடு"

மருந்தறியேன் மணியறியேன் மந்திரமொன்றறியேன்
மதியறியேன் விதியறியேன் வாழ்க்கைநிலை யறியேன்.
திருந்தறியேன் திருவருளின் செயலறியேன் அறந்தான்
செய்தறியேன், மனமடங்கும் திறத்தினி லோரிடத்தே,
இருந்தறியேன் அறிந்தோரை ஏத்திடவும் அறியேன்
எந்தைபிரான் மணிமன்றம் எய்த அறிவேனோ,
இருந்த திசை சொலவறியேன் எங்கனம்நான் புகுவேன்.
யார்க்குரைப்பே னென்னசெய்வேன் ஏதுமறிந்திலனே.
                                                      "ஓம் அகத்தீசாய நம"

Friday, October 14, 2011

கடவுள் வடிவம் ; கடவுள் இருப்பிடம் ; சீவன் இருப்பிடம்:

கடவுள் வடிவம்:
உயிர்க்கு உயிராம் ஒளி, சோதி, வடிவமே கடவுள் வடிவம், புறத்தில் திருவிளக்கின் பிரகாசம் ,
அகத்தில் (அனுபவத்தில்) அருட்சோதி வடிவம்.

கடவுள் இருப்பிடம்:
பார்க்குமிடம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்ற கடவுள், நம்மிலும் இயற்கை உண்மைக் கடவுள் காரணத்தாலுள்ள இடம் (பொற்சபை) உச்சி.

சீவன் இருப்பிடம்:
ஆன்மா சிற்றணு வடிவினன். இருப்பிடம் புருவ மையம்.
ஆகவே புருவ மையமாகிய சிற்சபையிலிருந்து
பொற்சபையாகிய உச்சியில் ஆண்டவரை தியானித்தல்.
ஆண்டவர் அருளைப் பெறுவதற்கு உண்மையான இடம்
மெய்யகம்.
 "ஓம் ஸ்ரீ வள்ளலார் சித்தர் சுவாமியே போற்றி"

Tuesday, May 3, 2011

பசியின் கொடுமையை பற்றிய "ஸ்ரீ வள்ளலார் சித்தர் சுவாமிகளின் - கூற்று"

"ஜீவர்களுக்கு பசி அதிகரித்த காலத்தில்"
ஜீவ அறிவு விளக்கமில்லாமல் மயங்குகின்றது-
அது மயங்கவே அறிவுக்கறிவாகிய கடவுள் விளக்கம்
மறைபடுகின்றது - அது மறையவே புருடதத்துவம்
சோர்ந்துவிடுகிறது. அது சோரவே பிரகிருதி தத்துவம்
மழுங்குகின்றது - அது மழுங்கவே குணங்களெல்லாம்
பேதப்படுகின்றன. மனம் தடுமாறிச் சிதறுகின்றது - புத்தி
கெடுகின்றது- சித்தம் கலங்குகின்றது - அகங்காரம் 
அழிகின்றது - பிராணன் சுழல்கின்றது -
பூதங்களெல்லாம்புழங்குகின்றன -வாதபித்த சிலேட்டுமங்கள் நிலை மாறுகின்றது
கண் பஞ்சடைந்து குழிந்து போகின்றது , காது
கும்மென்று செவிபடுகின்றது - நா உலர்ந்து வரளுகின்றது-
நாசி குழைந்து அழல்கின்றது தோல் மெலிந்து
ஸ்மரணை கெடுகின்றது -கை கால் சோர்ந்து 
துவளுகின்றன - மல சல வழி வெதும்புகின்றது,-
மேனி கருக்கின்றது ரோமம் வெறிக்கின்றது - நரம்புகள் குழைந்து நைகின்றன-
நாடிகள் கட்டுவிட்டுக் குழைகின்றன - எலும்புகள்
கருகிப் பூட்டுகள்  நெக்குவிடுகின்றன - இருதயம் வேகின்றது -
மூளை சுருங்குகின்றது - சுக்கிலம் மாமிசம் குழைந்து
தன்மை கெடுகின்றது - வயிறு  பகீரென்று எரிகின்றது .
தாப கோபங்கள் மேன்மேலும் உண்டாகின்றன.உயிரிழந்து
விடுவதற்கு மிகவும்சமீபத்த அடையாளங்களும்
அனுபவங்களும் மேன்மேலும் தோன்றுகின்றன.
பசியினால் இவ்வளவு அவத்தைகளுந் தோன்றுவது
ஜீவர்களுக்கெல்லாம் பொதுவாகவே இருக்கின்றது.
இவ்வளவு அவத்தைகளும் -ஆகாரம் கிடைத்தபோது
உண்டு - பசிநீங்க நீங்குகின்றன.  அப்பொழுது
தத்துவங்களெல்லாம் தளைத்தது -உள்ளம் குளிர்ந்து,
அறிவு விளங்கி , அகத்திலும் முகத்திலும்
ஜீவகளையும் கடவுள் களையுந்துளம்பி ஒப்பில்லாத
திருப்தி இன்பம் உண்டாகின்றன. இப்படிப்பட்ட
இன்பத்தை உண்டு பண்ணுகின்ற புண்ணியத்துக்கு
எந்த புண்ணியத்தை இணையென்று சொல்லலாம்? 
எல்லாத் தெய்வங்களுக்கும்மேலாகிய கடவுள் 
அம்சமென்றே சத்தியமாக அறியவேண்டும். இதனால்-
ரகவேதனை, சனனவேதனை, மரணவேதனை 
என்கின்ற மூன்று வேதனைகளுள் கூடி முடிந்த
வேதனையே பசிவேதனை என்றும் ;
அகம், புறம், நடு, கீழ், மேல், பக்கம் என்கின்ற
எவ்விடத்தும் நிறைந்து எக்காலத்தும் வேறுபடாத
மோட்ச இன்பமே ஆகாரத்தினால் உண்டாகும் திருப்தி
இன்பம் என்றும் அறியப்படும்.
             "ஓம் ஸ்ரீ வள்ளலார் சித்தர் சுவாமியே போற்றி"

Sunday, March 27, 2011

"இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு"

திருக்குறள்:
"இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் 
 பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு"

தமிழ்விளக்கம்:
இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ்
பெற விரும்புகிறவரர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் 
எதிர் கொள்வார்கள்.
     
English meaning:
God's praise who tell, are free from right
And wrong, the twins of dreaming night.

"ஓம்  ஸ்ரீ திருவள்ளுவர் சித்தர் பெருமானே போற்றி"

Saturday, March 26, 2011

"வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல"

திருக்குறள்:
"வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
  யாண்டும் இடும்பை இல"

தமிழ்விளக்கம்:
விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப்
பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே
துன்பம் ஏற்படுவதில்லை.

English meaning:
Who hold His feet who likes nor loathes
Are free from woes of human births.

     "ஓம்  ஸ்ரீ திருவள்ளுவர் சித்தர் பெருமானே போற்றி"  

Thursday, March 24, 2011

"கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்"

திருக்குறள் :
"கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
 நற்றாள் தொழாஅர் எனின்".

தமிழ்விளக்கம் :
தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே
வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர்
கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை.

English meaning:
That lore is vain which does not fall
At His good feet who knoweth all.

                 "ஓம்  ஸ்ரீ திருவள்ளுவர் சித்தர் பெருமானே போற்றி"

Wednesday, March 23, 2011

"ஸ்ரீ ஷிர்டி சாய் பாபா சித்தர் தியானச்செய்யுள்"

ஸ்ரீ ஷிர்டி சாய் பாபா சித்தர் தியானச்செய்யுள்:
சாயி நாதர் திருவடியே! 
சங்கடம் தீர்க்கும் திருவடியே! 
நேயம் மிகுந்த திருவடியே! 
நினைத்தளிக்கும் திருவடியே! 
தெய்வ பாபா திருவடியே! 
தீவினை தீர்க்கும் திருவடியே!
உயர்வை அளிக்கும் திருவடியே போற்றி!.

                            "ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி"   

Tuesday, March 22, 2011

"ஸ்ரீ பாம்பாட்டிச் சித்தர் தியானச்செய்யுள்"

ஸ்ரீ பாம்பாட்டிச் சித்தர் தியானச்செய்யுள்:
அடவி வாழ் பாம்புகளை ஆட்டுவித்து பின்
உடலில் வாழ் பாம்புதனை எழுப்புவித்து
கூடுவிட்டு கூடு பாய்ந்து ஞானமுத்து
கொடுத்தவரே குவலயத்தின் காவலரே!
ஆதிசேசனின் அருள் கண்டு
ஆதிசிவன் மகன் வரம் கொண்டு
ஜாதி மதங்கள் பேதம் இன்றி
காக்கும் சித்தரே காக்க! காக்க!

             "ஓம் வசி ஸ்ரீ பாம்பாட்டி சித்தர் சுவாமியே போற்றி"

Monday, March 21, 2011

"ஸ்ரீ கருவூர் சித்தர் தியானச்செய்யுள்"

ஸ்ரீ கருவூர் சித்தர் தியானச்செய்யுள்: கருவூரில் அவதரித்த மகாஸ்தபதியே திருக்
கலைத்தேரில் முடிதரித்த நவநிதியே
வாரி வழங்கி அருள் கொடுத்தாய்
காறி உமிழ்ந்தும் துயர் எடுத்தாய்
கல் உள்ளளவும் மண் உள்ளளவும் உன்
கருணைக்கரங்களே காப்பு! காப்பு!

      "ஓம் கம் நம் ஸ்ரீ கருவூரார் சித்தர் சுவாமியே போற்றி"

Sunday, March 20, 2011

"ஸ்ரீ கஞ்சமலை சித்தர் தியானச்செய்யுள்"

ஸ்ரீ கஞ்சமலை சித்தர் தியானச்செய்யுள்:
அப்பா என்று அடிதுவங்கி 
அழைத்தவருக்கு தப்பாமல் அருள்தரும்
தெய்வ சிகாமணியே
எப்பாவமும் புரியாமல் உங்கள்
திருப்பாதம் பற்றினோம்
அஞ்சேல் என்று அபயம் அளிப்பாய் கஞ்சமலை
சுவாமியே!.

       "ஓம் க்லம் ஸ்ரீ கஞ்சமலை சித்தர் சுவாமியே போற்றி"

"ஸ்ரீ கடுவெளி சித்தர் தியானச்செய்யுள்"

ஸ்ரீ கடுவெளி சித்தர் தியானச்செய்யுள்:
சுடும் வெய்யிலில் கடுவெளியில் 
ஏனிந்த வாழ்க்கை என ஏகாந்தமாய்
எக்களித்த சடைமுடி சுவாமியே 
விடைதெரியா பாதையில் 
வீறாப்பாய் நடைபோடும்
எம்மை கைப்பிடித்து கரைசேர்ப்பாய்
கடுவெளி நாதரே!.

"ஒம் லபம் ருணம் நஸீம் ஸ்ரீ கடுவெளி சித்தர் சுவாமியே போற்றி"

Thursday, March 17, 2011

"ஸ்ரீ பட்டினத்தார் சித்தர் தியானச்செய்யுள்"

ஸ்ரீ பட்டினத்தார் சித்தர் தியானச்செய்யுள்:
சந்திர விழியும் மந்திர மொழியும் கொண்ட சிவபக்தரே 
கரும்பு வில்லும் அரும்பு சொல்லுமாய் ஆண்டவனிடம் 
கலந்தவரே பற்றற்று, உற்றற்று,சுற்றற்று
ஈசன் கால்பற்றி இருக்கும் உங்கள் பாதம் பற்றினோம் 
பரிவுடன் காப்பீர் பட்டினத்தாரே!.

   "ஓம் ஸ்ரீ பட்டினத்தடிகளார் சித்தர் சுவாமியே போற்றி"    

Wednesday, March 16, 2011

"ஸ்ரீ இடைக்காடர் சித்தர் தியானச்செய்யுள்"

  ஸ்ரீ இடைக்காடர் சித்தர் தியானச்செய்யுள்:
ஆயனராய் அவதரித்து ஆண்டியாய் உருத்தரித்து
அபலைகளுக்கருளிய கோணார் பெருமானே!
ஓடுகின்ற கிரகங்களை கோடு போட்டு படுக்க வைத்த 
பரந்தாமனின் அவதாரமே ! மண் சிறக்க விண் சிறக்க 
கடைக்கண் திறந்து காப்பீர் இடைக்காடர் சுவாமியே!.

            "ஓம் ஸ்ரீ இடைக்காடர் சித்தர் சுவாமியே போற்றி"

Tuesday, March 15, 2011

"ஸ்ரீ வள்ளலார் சித்தர் சுவாமிகள் தியானச்செய்யுள்"

ஸ்ரீ வள்ளலார் சித்தர் சுவாமிகள் தியானச்செய்யுள்:
மென்மையே கருவாகி உண்மையே உருவாகி
வெண்மையே உடையாகி 
ஈமையில் இறைமை கண்டவரே 
நீரில் ஒளி ஏற்றிய நிர்மலனே
சிவசோதியில் கலந்த பரஞ்சோதியே
வழி தேடி அலையும் எமக்கு ஒளிகாட்டுவாய் மெய் ஞான சோதியே!.

                    "ஓம் ஸ்ரீ வள்ளலார் சித்தர் சுவாமியே போற்றி"

Sunday, March 13, 2011

"பிரபஞ்ச மர்மத்தை தேடும் நவீன அறிவியல் ஆய்வு"

அணுக்ககளை மோதச்செய்து செயற்கைப் பிரளயத்தை உருவாக்கி, அதன் மூலம் பிரபஞ்சம் உருவாக்கத்துக்கு புதியவிடை கண்டுபிடிக்கும் முயற்சியே Large Hadron Collider - LHC எனப்படும் 'மகா செயற்கைப் பிரளயம்'.
இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, அண்டவெளியில் நட்சத்திரங்கள் வெடித்து சிதறி அணுப்பொருள் தோன்றியதாகவும் பின்னர் அவை ஒன்றோடு ஒன்று இணைந்து கிரகங்களும், பின்னர் அதில் உயிரினங்களும் தோன்றியதாகவும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர் . அண்டவெளியில் இவ்வாறு நட்சத்திரங்கள் மோதிய சம்பவத்தை 'பிரளயம்' என்று வர்ணிக்கின்றனர்.
இந்த பிரளயத்தின் போது முதலில் அணுப்பொருட்கள் தோன்றின என்றாலும் அந்த அணுப் பொருட்கள் ஒன்றோடு ஒன்றாக இணைந்து திடப் பொருளாக உருவானது எப்படி? திடப்பொருள் உருவாகக் காரணமான அணுக்களை இணக்கச் செய்யும் பொருள் என்ன என்பது எவருக்கும் புரியாத புதிராகவே இருக்கிறது.அணுக்களை இணைக்கசெய்யும்அந்த மர்ம பொருளுக்கு 'கடவுள்' பொருள் என்று 1964 ல் பீட்டர் ஹிக்ஸ் என்ற விஞ்ஞானி பெயர் சூட்டினார்.
பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்து திட மற்றும் திரவ பொருட்களும் உருவாகக் காரணமான இந்த கடவுள் பொருளை கண்டுபிடிக்கும் சோதனை 2008 , செப்டம்பர் 10 ஆம் தேதி  சுவிட்சர்லாந்தில் துவங்கின. என்றாலும் பல தொழில் நுட்ப காரணங்களால் துவங்கிய ஒன்பது நாட்களுக்குள்ளேயே இந்த சோதனைகள் நிறுத்தப்பட்டன.
பழுது பார்ப்பு மற்றும் பல்வேறு மாற்றங்களுக்கு பின் 2009 ல் இத்திட்டம் மீண்டும் செயல்பட துவங்கியது . இத்திட்டத்தின் மொத்த மதீப்பீட்டுச் செலவு 9.2 பில்லியன் டாலர்கள். இதற்கான முறையான பணிகள் கடந்த 1994 ஆம் ஆண்டில் 'செர்ன்' என்ற ஐரோப்பிய ஆராய்ச்சி நிலையத்தில் துவங்கியது .
சோதனைக்கான பிரான்ஸ்-சுவிட்சர்லாந்து எலைப்பகுதியில் ஜெனீவா அருகே ஒரு ஆய்வு மையம் அமைக்கப்பட்டது .27 கி.மீ .நீளம் கொண்ட நீள்வட்ட வடிவிலான இந்த மையம் குழாய் வடிவிலானது. இதற்குள்தான் அணுக்களை மோதச் செய்து செயற்கை பிரளயம் ஏற்படுத்தப்படுகிறது . குழாய் அமைப்பின் இரு முனைகளிலும் பெரிய தூண் வடிவில் புரோட்டான்கள் நிறுவப்பட்டன. டன் கணக்கிலான எடை கொண்ட இந்த இரண்டு தூண்களும் எதிர் எதிராக கடிகாரச்சுற்றில் சுற்றிவந்து மோதும் . மணிக்கு 1600 கி.மீ . வேகத்தில் இந்த தூண்கள் மோதும் போது அது மிகப்பெரிய அளவிலான அணுகுண்டு சோதனை போல் இருக்கும்

 "மெய்ஞானமே எல்லா ஞானங்களுக்கும் முதன்மையானது;      மெய்ஞானத்தில்  நான்கில் ஒரு பாகமே விஞ்ஞானம்".  

Friday, March 11, 2011

"ஸ்ரீ காக புஜண்டர் சித்தர் தியானச்செய்யுள்"

ஸ்ரீ காக புஜண்டர் சித்தர் தியானச்செய்யுள்:
காலச் சக்கரம் மேல் ஞானச்சக்கரம் ஏந்திய
மகா ஞானியே யுகங்களைக் கணங்களாக்கி கவனித்திடும்
காக்கை சுவாமியே மும்மூர்த்திகள் போற்றும்
புஜண்டரே உமது கால் பற்றிய எம்மைக் காப்பாய்
காகபுஜண்ட சுவாமியே!.

"ஓம் ஸ்ரீம் ஹ்ரீம்,லம், நமஹ ஸ்வம் ஸ்ரீ காகபுஜண்டர் சித்தர் சுவாமியே போற்றி"

Thursday, March 10, 2011

"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு"

திருக்குறள் :
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
 பகவன் முதற்றே உலகு".
தமிழ் விளக்கம் :      அகரம் எழுத்துகளுக்கு முதன்மை ; ஆதிபகவன் , உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.
English meaning :
'A' leads letters; the Ancient Lord Leads and lords the EntireWorld.
             "ஓம்  ஸ்ரீ திருவள்ளுவர் சித்தர் பெருமானே போற்றி"

Wednesday, March 9, 2011

"ஸ்ரீ சிவவாக்கிய சித்தர் தியானச்செய்யுள்"

ஸ்ரீ சிவவாக்கிய சித்தர் தியானச்செய்யுள்:
சிவனில் சிந்தை வைத்து சீவனில் சித்து வைத்து
அவனியைக் காக்க வந்த அழகர் பெருமானே.....
அபாயம் நீக்கி சிவாயம் காட்டும்
தங்கள் தாமரைத் திருவடிக் காப்பு!.

                    "ஓம் ஸ்ரீ சிவவாக்கிய சித்தர் பெருமானே போற்றி"

Friday, February 25, 2011

"சற்குரு அகத்தியர் துதி மற்றும் ஸ்ரீ மகாபோகர் சித்தர் தியானச்செய்யுள்"

சற்குரு 'அகத்தியர்' துதி:
கற்றைவார் சடையன் பெற்ற கற்றைவார் சடையன் நீயே!
நற்றவச் சிவனார் பெற்ற நற்றவ முனிவன் நீயே!
பெற்றவன் தமிழைப் பெற்றான் பிள்ளைநீ தமிழ் வளர்த்தாய்!
கொற்றவன் அவன் இமயம் குடமுனி பொதிகை வேந்தே!
வேந்தன் நீ என்பதால் என் வேதனை தவிர்க்க கேட்டேன்!
மாந்தர்தம் துயர் துடைத்தல் மன்னனின் கடமை அன்றோ!
பூந்தமிழ் வளர்த்த செல்வ புலவர்நற் குல முதல்வ!
சாந்தநற் குருவே நின்தாள் சரணென அடைந்தேன் காவாய்!
காவாயேல் என்னை ஈங்கு காத்திட எவருமில்லை!
நாவாயு புயலிற் சிக்கி தவித்தற்போல் தவிக்கின்றேன் நான்!
பேய் வாயினின்றும் மீட்ட பெருமானே என்றும் தாயாய் இருந்தே காப்பாய்!
தலைவைத்தேன் நினதுதாளே சரணம்!!!
                                            "ஒம் அகத்திசாய நம"
                                                   

ஸ்ரீ மகாபோகர் சித்தர் தியானச்செய்யுள்:
சிவிகை ஏந்தி,சிரம் தாழ்த்தும் சித்தர் பெருமக்களுக்கு
மூலிகை மேனியாய் பேரருள் புரியும் போகர் பெருமானே
சிவபாலனுக்கு ஜீவன் தந்த சித்த ஒளியே
நவ பாஷாணத்து நாயகனே உங்கள் நல்லருள் காக்க! காக்க!

 "ஒம் ஆம் ஊம் ஸ்ரீ மகாபோகர் சித்தர் ஸ்வாமியே போற்றி"
  

Wednesday, February 23, 2011

"அறிதலே அறிவு"

"பட்டினத்தார்"
"என்னை யறியா லெனக்குள்ளே நீயிருக்க
உன்னை யறியாமல் உடலழிந்தேன் பூரணமே
வானென்பார் அண்டமென்பார் வாய் ஞானமே பேசி
தானென்பார் வீணர் தனையறியார் பூரணமே
ஒன்றாய் யுயிராய் உடல் தோறும் நீயிருந்தும்
என்று மறியார்களே ழைகள் தாம் பூரணமே 
நகார மகாராமென்பார் நடுவே சிகாரமென்பார்
வகார யகாரமென்பார் வகையறியார் பூரணமே 
வாசிதனைப் பார்த்து மகிழ்ந்த்துணைத்தான் போற்றாமல் 
காசிவரை போய் திரிந்து காலலுத்தேன் பூரணமே 
உடலுக்குள் நீ நின்றுலாவினதைக் காணாமல்
கடல் மலைதோறும்திரிந்து காலலுத்தேன் பூரணமே".

 "சிவ வாக்கியார்"
"நட்டு வைத்த தேவரும் பொய் நான் மறை களாணதும் பொய் 
கட்டிவைத்த புத்தக கதைகளும் பொய் புராணமும் பொய் 
எட்டு திக்கு தேவரும்போய் ஏழிரண்டு லோகமும் பொய் 
மட்டில்லாத ஜோதினம் மனத்துள்ளே விளங்குமே"

"அகத்தில் உள்ள ஆன்ம ஜோதியை அறிதலே-ஆன்ம அறிவு" 

Friday, February 11, 2011

"அருவருப்பு ஆன்மிகம்"

பாடல் : 
"தங்கள் தேகம் நோய் பேரின் தனை பிடரி கோயிலிற் 
பொங்கல் வைத்தும் ஆடு ,கோழி பூசை பலியை இட்டிட 
நங்க சொல்லு நலிமிகுந்து நாளும் தேய்ந்து மூஞ்சூராய் 
உங்கள் குலத் தெய்வமுங்க ளுருக்குலைப்ப துண்மையே".

"கும்பிடும் தெய்வ மெலாம் குல தெய்வமாய் சோடித்தே
நம்பி நாளும் பூசை செய்து நற்படிகள் தந்திட 
வெம்பிட வெதும்பிட மிடியதின லிடிபட 
தெம்பிட குடிகெடுக்கும் செத்த தெய்வமாகுமே".    
விளக்கம் :
உலக மக்களே , நீங்கள் நோய் வாய்ப்பட்டு விட்டால் உங்கள் ஊரில் உள்ள குல தெய்வங்களுக்கும் , வழி தெய்வங்களுக்கும் பொங்கல் வைத்து ஆடு ,கோழி, பன்றி என முப்பூசை இட்டாலும் அதனால் நோய் , பிரச்சனை ,கஷ்டம் தீராது . அதனால் இந்த உயிர்களை கொன்ற பாவம் , உங்கள் வாழ்வில் அதிகம் சிரமம், கஷ்டத்தை தரும் . மேலும் சரீரமும், வாழ்க்கையும், தேய்ந்து போகும்.
நீங்கள், கும்பிடும் தெய்வமெல்லாம் குல தெய்வம் என்று கூறி அந்த தெய்வம் தன்னை காக்கும் என்று எண்ணி, தினந்தோரும் பொங்கல் பூசை செய்து வந்த போதும் அந்த குல தெய்வம் உன் தெம்பை குறைத்து ,உன்னை வெம்ப வைத்து ,மனம் வெதும்பவைத்து உன் வாழ்வில் இடிவிழுந்தது போன்று கஷ்டம்,பிரச்சனைகளை மேலும் அதிகமாக தரும் இந்த குடியை கெடுக்கும் செத்த தெய்வம்.
இந்த வழிபாட்டு முறைகளும் ஆன்மிகம் அல்ல .இந்த முறையும் ஞானம் அடைய உதவாது 
தன்னை அறியும் பக்குவத்தையும் தராது என புரிந்துகொள்ள வேண்டும்.
                                                         "சிவ வாக்கியார்"

Thursday, February 3, 2011

"பன்றியாகப் பிறப்பவர் யார் எனல்"

பாடல்:
"கொன்றி லாரைக் கொலச்சொலிக் கூறினார்
தின்றி லாரைத் தினச்சொலித் தெண்டித்தார்
பன்றி யாப்படி  யில்பிறந்த தேழ்நரகு 
ஒன்று வார்அரன் ஆணைஇது உண்மையே".

விளக்கம்:
கொல்லும் தன்மை இல்லாதவர்களைக் கொல்லும்படி சொல்லித் தூண்டினவர்களும் , புலால் புசியாதவர்களைப் புசிக்குமாறு சொல்லி வற்புறுத்தித் தின்னுமாறு  செய்தவர்களும் , பூமியில் பன்றியாகப்பிறந்து , பின்  ஏழ்
நரகத்திலும் போய்ச் சேர்வர். 
இது சிவபெருமான் ஆணையாகும், இது சத்தியம் .
மலம் தின்னும் இயல்புடையது பன்றி.ஆதலின் அதன் பிறப்பு இழியுடைதாயிற்று. அந்த இழி பிறப்புத் தீயவர்கட்கு ஏற்படும் என்பார். பன்றியாகப் படியில் பிறப்பார் என்றனர். பிறக்க வைப்பது இறைவனே ஆதலின் அரன் ஆணை என்றனர்.
                                                                     "திருமூலர்" 



Monday, January 31, 2011

"குருவழிபாடே சிறந்த வழிபாடு"

பாடல் : 
"இறைவனை வழிபட்டார்  எண்ணிலாத் தேவர் 
 அவனை வழிபட்டங்  காமாறொன் றில்லை
 அவனை   வழிபட்டங்  காமாறு காட்டும்
 குருவை வழிபடின் கூடலும் ஆமே".

விளக்கம் :
சிவபெருமானை பல தேவர்கள் வழிபட்டனர், அப்பெருமானை மட்டும் வழிபட்டால் போதாது, அப்பெருமானை வழிபட்டுப் பலன் பெற வேண்டுமானால் குருவையும் வழிபடுதல் வேண்டும். அப்போதுதான் எல்லா நன்மைகளும் கைகூடும்.
இறைவனை வழிபட்டால் ஒரு பயனும் ஏற்படாது என்றதன் கருத்து,இறைவனால் ஒன்றும் தர இயலாது என்பதன்று.அவன் திருவருளைப் பெறுவதற்குக் குருவின் திருவருளும் வேண்டும் என்பதாம்.இதனை வற்புறுத்தவே அவ்வாறு கூறப்பட்டது.
                                         "திருமூலர்"

Sunday, January 30, 2011

பட்டினத்தார் - "தாயாரின் இறுதி ஈமக்கடன் பாடல்"


ஐயிரண்டு  திங்களா அங்கமெலாம் நொந்துபெற்றுப்
பையல்என்ற போதே  பரிந்து எடுத்துச் - செய்யவிரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி.

முந்தித் தவம்கிடந்து முந்நூறு நாள்சுமந்தே
அந்திபக லாச்சிவனை ஆதரித்துத் - தொந்தி
சரியச் சுமந்துபெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல்மூட்டு வேன். 

வட்டடிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டடிலிலும் வைத்தென்னைக்  காதலித்து - முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ
விறிகிலிட்டுத் தீமூட்டு வேன்.

நொந்து சுமந்துபெற்று நோவாமல் ஏந்திமுலை
தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே - அந்திபகல்
கையிலே கொண்டுஎன்னைக் காப்பாற்றும் தாய்தனக்கோ
மெய்யிலே  தீமூட்டு வேன்.

அரிசியோ நானிடுவேன் ஆத்தாள் தனக்கு
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் -  உருகிஉள்ள
தேனே அமிர்தமே செல்வத் திரவியப்பு
மானே என அழைத்த  வாய்க்கு.

அள்ளி இடுவது அரிசியோ தாய்தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனா கூசாமல் - மெள்ள
முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்
மகனே எனவழைத்த வாய்க்கு.

முன்னை இட்டதீ முப்பு ரத்திலே
பின்னை இட்டதீ தென் னிலங்கையில் 
அன்னை இட்டதீ அடிவ யிற்றிலே
யானும் இட்டதீ மூள்க மூள்கவே.

வேகுதே தீயதனில் வெந்துபொடி சாம்பல்
ஆகுதே பாவியேன்  ஐயகோ - மாகக்
குருவி பறவாமல் கோதாட்டி  என்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை.

வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்
வந்தாளோ என்னை மறந்தாளோ - சந்ததமும்  உன்னையே நோக்கி உகந்துவரம் கிடந்ததென்
தன்னையே  ஈன்றெடுத்த தாய் .

வீற்றிருந்  தாளன்னை வீதிதனில் இருந்தாள்
நேற்றிருந்தாள் இன்றுவெந்து நீறானாள் - பால் தெளிக்க
எல்லீரும் வாருங்கள் ஏதுஎன்று இரங்காமல்
எல்லாம் சிவமயமே யாம் . 
                                                 -  "ஞான பிதா"

                                                                       

Wednesday, January 12, 2011

தனித்திரு விழித்திரு பசித்திரு

தனித்திரு : 
ஆசாபாசங்களில் அறிவை அழுந்த விடாமல் பற்றற்றான் பற்றினையே பற்றிக் கொண்டிருத்தல் , எவ்வித கூட்டுறவுகளில் கலந்திருந்த போதிலும் சீவன் பரமனை பற்றி இருத்தலே தனித்திருத்தல் - மனம் தனித்து அமைதி நிலையில் இருத்தல் ஆகும்.
விழித்திரு :
மனம் , புத்தி ,சித்தம் ,அகங்காரம் முதலிய காரணங்களை  அன்புக்குரிய  நன் முயற்சியில் ஈடுபடுத்தி பொய் , பொறாமை, காமம் , குரோதம் , லோபம் , மோகம், மதம், மாச்சரியம் முதலான துவேச உணர்வுகளிலிருந்து தடுத்துப் பழகுதலே விழித்திருத்தல் - விழித்திருத்தல் எனப்பெறும் அறிவுடன் இருத்தல் ஆகும் .
பசித்திரு :
தேகம் நீடிக்க அளவோடு உண்ணல் , சுத்த ஆகாரத்தை பசித்த போது கொள்ளல் . அமுதமாயினும் அதிகம் புசியாதிருத்தல் . ஆண்டவர் அருளமுதம் அருந்த அருட்கணல் ஏற்றி அவாக்  கொள்ளுதலே பசித்திருத்தல் - முழுமை சித்தி அடையும்வரையில் ஆன்மப்  பசியுடன் இருத்தல் ஆகும்.
                       -----' வள்ளல் பெருமான்' இராமலிங்க அடிகள்-----