Friday, February 25, 2011

"சற்குரு அகத்தியர் துதி மற்றும் ஸ்ரீ மகாபோகர் சித்தர் தியானச்செய்யுள்"

சற்குரு 'அகத்தியர்' துதி:
கற்றைவார் சடையன் பெற்ற கற்றைவார் சடையன் நீயே!
நற்றவச் சிவனார் பெற்ற நற்றவ முனிவன் நீயே!
பெற்றவன் தமிழைப் பெற்றான் பிள்ளைநீ தமிழ் வளர்த்தாய்!
கொற்றவன் அவன் இமயம் குடமுனி பொதிகை வேந்தே!
வேந்தன் நீ என்பதால் என் வேதனை தவிர்க்க கேட்டேன்!
மாந்தர்தம் துயர் துடைத்தல் மன்னனின் கடமை அன்றோ!
பூந்தமிழ் வளர்த்த செல்வ புலவர்நற் குல முதல்வ!
சாந்தநற் குருவே நின்தாள் சரணென அடைந்தேன் காவாய்!
காவாயேல் என்னை ஈங்கு காத்திட எவருமில்லை!
நாவாயு புயலிற் சிக்கி தவித்தற்போல் தவிக்கின்றேன் நான்!
பேய் வாயினின்றும் மீட்ட பெருமானே என்றும் தாயாய் இருந்தே காப்பாய்!
தலைவைத்தேன் நினதுதாளே சரணம்!!!
                                            "ஒம் அகத்திசாய நம"
                                                   

ஸ்ரீ மகாபோகர் சித்தர் தியானச்செய்யுள்:
சிவிகை ஏந்தி,சிரம் தாழ்த்தும் சித்தர் பெருமக்களுக்கு
மூலிகை மேனியாய் பேரருள் புரியும் போகர் பெருமானே
சிவபாலனுக்கு ஜீவன் தந்த சித்த ஒளியே
நவ பாஷாணத்து நாயகனே உங்கள் நல்லருள் காக்க! காக்க!

 "ஒம் ஆம் ஊம் ஸ்ரீ மகாபோகர் சித்தர் ஸ்வாமியே போற்றி"
  

Wednesday, February 23, 2011

"அறிதலே அறிவு"

"பட்டினத்தார்"
"என்னை யறியா லெனக்குள்ளே நீயிருக்க
உன்னை யறியாமல் உடலழிந்தேன் பூரணமே
வானென்பார் அண்டமென்பார் வாய் ஞானமே பேசி
தானென்பார் வீணர் தனையறியார் பூரணமே
ஒன்றாய் யுயிராய் உடல் தோறும் நீயிருந்தும்
என்று மறியார்களே ழைகள் தாம் பூரணமே 
நகார மகாராமென்பார் நடுவே சிகாரமென்பார்
வகார யகாரமென்பார் வகையறியார் பூரணமே 
வாசிதனைப் பார்த்து மகிழ்ந்த்துணைத்தான் போற்றாமல் 
காசிவரை போய் திரிந்து காலலுத்தேன் பூரணமே 
உடலுக்குள் நீ நின்றுலாவினதைக் காணாமல்
கடல் மலைதோறும்திரிந்து காலலுத்தேன் பூரணமே".

 "சிவ வாக்கியார்"
"நட்டு வைத்த தேவரும் பொய் நான் மறை களாணதும் பொய் 
கட்டிவைத்த புத்தக கதைகளும் பொய் புராணமும் பொய் 
எட்டு திக்கு தேவரும்போய் ஏழிரண்டு லோகமும் பொய் 
மட்டில்லாத ஜோதினம் மனத்துள்ளே விளங்குமே"

"அகத்தில் உள்ள ஆன்ம ஜோதியை அறிதலே-ஆன்ம அறிவு" 

Friday, February 11, 2011

"அருவருப்பு ஆன்மிகம்"

பாடல் : 
"தங்கள் தேகம் நோய் பேரின் தனை பிடரி கோயிலிற் 
பொங்கல் வைத்தும் ஆடு ,கோழி பூசை பலியை இட்டிட 
நங்க சொல்லு நலிமிகுந்து நாளும் தேய்ந்து மூஞ்சூராய் 
உங்கள் குலத் தெய்வமுங்க ளுருக்குலைப்ப துண்மையே".

"கும்பிடும் தெய்வ மெலாம் குல தெய்வமாய் சோடித்தே
நம்பி நாளும் பூசை செய்து நற்படிகள் தந்திட 
வெம்பிட வெதும்பிட மிடியதின லிடிபட 
தெம்பிட குடிகெடுக்கும் செத்த தெய்வமாகுமே".    
விளக்கம் :
உலக மக்களே , நீங்கள் நோய் வாய்ப்பட்டு விட்டால் உங்கள் ஊரில் உள்ள குல தெய்வங்களுக்கும் , வழி தெய்வங்களுக்கும் பொங்கல் வைத்து ஆடு ,கோழி, பன்றி என முப்பூசை இட்டாலும் அதனால் நோய் , பிரச்சனை ,கஷ்டம் தீராது . அதனால் இந்த உயிர்களை கொன்ற பாவம் , உங்கள் வாழ்வில் அதிகம் சிரமம், கஷ்டத்தை தரும் . மேலும் சரீரமும், வாழ்க்கையும், தேய்ந்து போகும்.
நீங்கள், கும்பிடும் தெய்வமெல்லாம் குல தெய்வம் என்று கூறி அந்த தெய்வம் தன்னை காக்கும் என்று எண்ணி, தினந்தோரும் பொங்கல் பூசை செய்து வந்த போதும் அந்த குல தெய்வம் உன் தெம்பை குறைத்து ,உன்னை வெம்ப வைத்து ,மனம் வெதும்பவைத்து உன் வாழ்வில் இடிவிழுந்தது போன்று கஷ்டம்,பிரச்சனைகளை மேலும் அதிகமாக தரும் இந்த குடியை கெடுக்கும் செத்த தெய்வம்.
இந்த வழிபாட்டு முறைகளும் ஆன்மிகம் அல்ல .இந்த முறையும் ஞானம் அடைய உதவாது 
தன்னை அறியும் பக்குவத்தையும் தராது என புரிந்துகொள்ள வேண்டும்.
                                                         "சிவ வாக்கியார்"

Thursday, February 3, 2011

"பன்றியாகப் பிறப்பவர் யார் எனல்"

பாடல்:
"கொன்றி லாரைக் கொலச்சொலிக் கூறினார்
தின்றி லாரைத் தினச்சொலித் தெண்டித்தார்
பன்றி யாப்படி  யில்பிறந்த தேழ்நரகு 
ஒன்று வார்அரன் ஆணைஇது உண்மையே".

விளக்கம்:
கொல்லும் தன்மை இல்லாதவர்களைக் கொல்லும்படி சொல்லித் தூண்டினவர்களும் , புலால் புசியாதவர்களைப் புசிக்குமாறு சொல்லி வற்புறுத்தித் தின்னுமாறு  செய்தவர்களும் , பூமியில் பன்றியாகப்பிறந்து , பின்  ஏழ்
நரகத்திலும் போய்ச் சேர்வர். 
இது சிவபெருமான் ஆணையாகும், இது சத்தியம் .
மலம் தின்னும் இயல்புடையது பன்றி.ஆதலின் அதன் பிறப்பு இழியுடைதாயிற்று. அந்த இழி பிறப்புத் தீயவர்கட்கு ஏற்படும் என்பார். பன்றியாகப் படியில் பிறப்பார் என்றனர். பிறக்க வைப்பது இறைவனே ஆதலின் அரன் ஆணை என்றனர்.
                                                                     "திருமூலர்"