பாடல் :
"இறைவனை வழிபட்டார் எண்ணிலாத் தேவர்
அவனை வழிபட்டங் காமாறொன் றில்லை
அவனை வழிபட்டங் காமாறு காட்டும்
குருவை வழிபடின் கூடலும் ஆமே".
விளக்கம் :
சிவபெருமானை பல தேவர்கள் வழிபட்டனர், அப்பெருமானை மட்டும் வழிபட்டால் போதாது, அப்பெருமானை வழிபட்டுப் பலன் பெற வேண்டுமானால் குருவையும் வழிபடுதல் வேண்டும். அப்போதுதான் எல்லா நன்மைகளும் கைகூடும்.
இறைவனை வழிபட்டால் ஒரு பயனும் ஏற்படாது என்றதன் கருத்து,இறைவனால் ஒன்றும் தர இயலாது என்பதன்று.அவன் திருவருளைப் பெறுவதற்குக் குருவின் திருவருளும் வேண்டும் என்பதாம்.இதனை வற்புறுத்தவே அவ்வாறு கூறப்பட்டது.
"திருமூலர்"
"இறைவனை வழிபட்டார் எண்ணிலாத் தேவர்
அவனை வழிபட்டங் காமாறொன் றில்லை
அவனை வழிபட்டங் காமாறு காட்டும்
குருவை வழிபடின் கூடலும் ஆமே".
விளக்கம் :
சிவபெருமானை பல தேவர்கள் வழிபட்டனர், அப்பெருமானை மட்டும் வழிபட்டால் போதாது, அப்பெருமானை வழிபட்டுப் பலன் பெற வேண்டுமானால் குருவையும் வழிபடுதல் வேண்டும். அப்போதுதான் எல்லா நன்மைகளும் கைகூடும்.
இறைவனை வழிபட்டால் ஒரு பயனும் ஏற்படாது என்றதன் கருத்து,இறைவனால் ஒன்றும் தர இயலாது என்பதன்று.அவன் திருவருளைப் பெறுவதற்குக் குருவின் திருவருளும் வேண்டும் என்பதாம்.இதனை வற்புறுத்தவே அவ்வாறு கூறப்பட்டது.
"திருமூலர்"