Wednesday, August 29, 2012

"தியானமே கடவுளைக் காணும் வழி "

பாடல்:
"எண்ணா யிரத்தாண்டு யோகம் இருப்பினும் 
 கண்ணால் அமுதினைக் கண்டறி வார் இல்லை 
 உண்ணாடி யுள்ளே  ஒளியுற நோக்கினால் 
 கண்ணாடி போலக் கலந்திருந் தானே ".

பொருள்:
எண்ணாயிரம் வருட காலம் யோகத்தில் இருந்தாலும்
அமுதமாம் சிவனைக் கண்ணாரக் கண்டவர்  இலர் .
ஆனால் உள்நாடியாகிய சுழுமுனை நாடியில் ஒளி
வடிவாகத் தியானிக்கின்  கண்ணாடியின் ஒளி
போலத் தியானிப்பவருடன்  கலந்து  இறைவன் இருப்பன் .

எண்ணாயிரம்  என்பது  பல ஆண்டுகள் என்னும் பொருள்  
தரும் நிலையில் உள்ளது . இறைவன் இன்பவடிவினன் .
ஆதலின் அவனை அமுது எனறனர், யோகநிலையில் 
இருந்தால் மட்டும் போதாது . உள்நாட்டத்துடன்
இருக்கவேண்டும் ,என்பது கூறப்படுகிறது .
இதனால் இறைவன் நினைவின்றி எதைசெய்யினும்
பயன் இல்லை என்றனர் .
                                                   "ஓம் திருமூலர் தேவாய நம"

No comments:

Post a Comment