பாடல்:
"எண்ணா யிரத்தாண்டு யோகம் இருப்பினும்
கண்ணால் அமுதினைக் கண்டறி வார் இல்லை
உண்ணாடி யுள்ளே ஒளியுற நோக்கினால்
கண்ணாடி போலக் கலந்திருந் தானே ".
பொருள்:
எண்ணாயிரம் வருட காலம் யோகத்தில் இருந்தாலும்
அமுதமாம் சிவனைக் கண்ணாரக் கண்டவர் இலர் .
ஆனால் உள்நாடியாகிய சுழுமுனை நாடியில் ஒளி
வடிவாகத் தியானிக்கின் கண்ணாடியின் ஒளி
போலத் தியானிப்பவருடன் கலந்து இறைவன் இருப்பன் .
அமுதமாம் சிவனைக் கண்ணாரக் கண்டவர் இலர் .
ஆனால் உள்நாடியாகிய சுழுமுனை நாடியில் ஒளி
வடிவாகத் தியானிக்கின் கண்ணாடியின் ஒளி
போலத் தியானிப்பவருடன் கலந்து இறைவன் இருப்பன் .
எண்ணாயிரம் என்பது பல ஆண்டுகள் என்னும் பொருள்
தரும் நிலையில் உள்ளது . இறைவன் இன்பவடிவினன் .
ஆதலின் அவனை அமுது எனறனர், யோகநிலையில்
இருந்தால் மட்டும் போதாது . உள்நாட்டத்துடன்
இருக்கவேண்டும் ,என்பது கூறப்படுகிறது .
இதனால் இறைவன் நினைவின்றி எதைசெய்யினும்
பயன் இல்லை என்றனர் .
இருக்கவேண்டும் ,என்பது கூறப்படுகிறது .
இதனால் இறைவன் நினைவின்றி எதைசெய்யினும்
பயன் இல்லை என்றனர் .
"ஓம் திருமூலர் தேவாய நம"
No comments:
Post a Comment