Monday, September 3, 2012

"அகக் கண்ணால் பார்ப்பதே ஆனந்தம்"

பாடல் :
"முகத்தில் கண்கொண்டு பார்க்கின்ற மூடர்காள்
 அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆநந்தம்
 மகட்குத் தாய் தன் மணாளனோ டாடிய
 சுகத்தைச் சொல்என்றால் சொல்லுமா  றெங்ங்னே"

பொருள் :
முகத்தில் அமைந்த கண்களைக்கொண்டு பார்க்கின்ற
மூடர்களே! அப்பார்வையால் யோகக் காட்சி தென்படாது .
மனக் கண்ணால் பார்க்கிறபோதுதான் யோகக்காட்சியின்
இன்பம் தோன்றும் .தாய் தன் கணவனோடு கலந்து
இன்புற்ற இன்பத்தைப் பற்றிக் கன்னியாக உள்ள
தன் மகட்குக் கூற முடியுமா? முடியாதன்றோ?.

                                 "ஓம் திருமூல சித்த தேவாய நம"

No comments:

Post a Comment