Wednesday, September 5, 2012

"நல்ல குருவைக் கொள்ளாமையால் கேடே வரும்"

பாடல் :
"குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
 குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர் 
 குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக் 
 குருடும் குருடும் குழிவிழும் ஆறே" 

பொருள் :  
மக்கள் அஞ்ஞானத்தை நீக்கும் குருவைத் தேடி அடையார்.
அஞ்ஞானத்தைப் போக்காத குருவைத் தான் அடைவர் .
அவர்கள் செயல் பிறவிக் குருடாக இருக்கும். 
இரண்டு குருடர்கள் கண்மூடி ஆடும் ஆட்டம் ஆடிப் 
பள்ளத்தில் விழுதலுக்கு ஒப்பாவர். 
குருட்டாட்டம் என்பது சிறு  பிள்ளைகள் தம் கண்ணைத் 
துணியால் மறைத்துக் கொண்டு, எதிரிலுள்ள 
பிள்ளைகளைத் தொட முயற்சி செய்தல். 

No comments:

Post a Comment